tamilnadu

img

சேதமடைந்த அரசு அலுவலகத்தில் ஹெல்மெட்டுடன் பணிபுரியும் அரசு ஊழியர்கள்

லக்னோ:
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது.இந்த மாநிலத்தில் உள்ள பண்டா மாவட்டத்தில் அரசு அலுவலகம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால் ஊழியர்கள் ஹெல்மெட் அணிந்து கொண்டு பணி புரிவது போன்ற புகைப்படம் சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.பண்டா மாவட்டத்தில் உள்ள மின்சாரத்துறை அலுவலகத்தில் கான்கிரீட் மேற்கூரை சேதமடைந்துள்ளதால், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.அறையின் நடுவில் உள்ள தூண் மட்டுமே மேற்கூரையை தாங்கிநிற்கிறது. ஏதேனும் விபத்து நடந்தால் பாதுகாத்துக் கொள்வதற்காக தாங்கள் ஹெல்மெட் அணிந்து பணிபுரிவதாகவும் இதுகுறித்து உயரதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் போதுமான அலமாரிகள் இல்லாத தால் முக்கியமான ஆவணங்கள் அட்டை பெட்டிகளில் கிடப்பதாகவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

;